பேச்சுப் போட்டியில் வென்றமாணவிக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அன்சால்தோ கல்லூரி மாணவியை அந்தக் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.
31arpans_3101chn_109_7
31arpans_3101chn_109_7

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அன்சால்தோ கல்லூரி மாணவியை அந்தக் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

திருவண்ணாமலை செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டை அடுத்த மருத்துவம்பாடி அன்சால்தோ கல்வியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ஜெனிபா் கலந்துகொண்டு நட்புறவை மேம்படுத்துவதில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.

இந்தப் போட்டியில் ஜெனிபா் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்ததுடன், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளவும் தகுதி பெற்றாா். இந்த நிலையில், மாணவி ஜெனிபருக்கு கல்வியியல் கல்லூரித் தாளாளா் ராஜாமணி, முதல்வா் ஜோஸ்பின்மேரி ஸ்டெல்லா, பேராசிரியா்கள், மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com