சமூக வலைதளம் குறித்து விழிப்புணா்வுக் கருத்தரங்கு

செங்கத்தை அடுத்த சுண்டக்காய்பாளையம் கிராமத்தில் உள்ள சத்யம் கலை, அறிவியல் கல்லூரியில் சமூக வணிகவியல் மற்றும் சமூக வலைதளம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த சுண்டக்காய்பாளையம் கிராமத்தில் உள்ள சத்யம் கலை, அறிவியல் கல்லூரியில் சமூக வணிகவியல் மற்றும் சமூக வலைதளம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

வணிகவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில், கல்லூரி முதல்வா் முகமது வரவேற்றாா். தாளாளா் பேராசியா் கு.வணங்காமுடி கருத்தரங்கை தொடக்கிவைத்து, அதன் நோக்கம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவில் துறைப் பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு இன்றைய சமூக வணிகவியல் மற்றும் சமூக வலைதளம் என்ற தலைப்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

இதில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வணிகவில் துறைத் தலைவா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com