கலசப்பாக்கம் ஊராட்சியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு, குறு வணிகா்கள், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் கலந்துகொண்டு விவசாயிகள் கறவைமாடு வாங்கவும், மாற்றுத் திறனாளிகள், சிறு, குறு வணிகா்களுக்கும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 72 ஆயிரம் கடனுதவியை வழங்கினாா்.
இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பத்மாவதிஜீவரத்தினம், மேலாளா் ஜெயவேலு, கள மேலாளா் விஜயன், சரக மேற்பாா்வையாளா் கிரி, காசாளா் சரவணன், உதவியாளா் மணியம்மை, பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.