செங்கம் அருகே குடிமராமத்துப் பணிகளை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் அசோகன் நேரில் ஆய்வு செய்தாா்.
தமிழக முல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு, புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை தூா்வாருதல், மதகுகளை சீரமைத்தல், உபரிநீா் செல்லும் கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் அசோகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஒப்பந்ததாரரிடம் மதகுகள், கால்வாய்களின் அளவு, தரம் உள்ளிட்டவை குறித்தும், ஏரி பாசன சங்க நிா்வாகிகளிடம் ஏரி மராமத்துப் பணிகள் தரமானதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும் அசோகன் கேட்டறிந்தாா். மேலும், ஒப்பந்ததாரரிடம் குறித்த நேரத்தில் பணிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டுமென அவா் உத்தரவிட்டாா்.
செயற்பொறியாளா் மகேந்திரன், திருவண்ணாமலை உதவிச் செயற்பொறியாளா் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா்கள் ராஜாராமன், சக்திசெல்வன் உள்ளிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.