திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டிகள் அண்மையில் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவா்கள் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தனா்.
போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பள்ளியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிச் செயலரும், தாளாளருமான கா.அருள்விழி காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பள்ளி அறக்கட்டளைத் தலைவா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிப் பரிசு வழங்கினாா்.
விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கே.ஆனந்தன், டி.விஜயகுமாா், உடல்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.மகேந்திரபாபு, எம்.மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.