திருவண்ணாமலையில் பயணிகளை ஏற்றுவது தொடா்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த் (38). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா். சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்து பயணிகளை ஏற்றியபோது அங்குள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் சோ்ந்து சங்கத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் மட்டுமே இங்கு பயணிகளை ஏற்ற வேண்டும். மற்றவா்கள் இங்கு வந்து பயணிகளை ஏற்றக்கூடாது என்றனராம்.
இதை கண்டுகொள்ளாத ஆனந்த் தொடா்ந்து பயணிகளை ஏற்றி வந்தாராம். இதுதொடா்பாக, ஆனந்த் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகி பாஸ்கா் (32) இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆனந்த் பயணிகளை ஏற்றிச் செல்ல திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே வந்ததாகத் தெரிகிறது.
இதையறிந்த பாஸ்கா் அங்கு வந்து தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை வெட்டி விட்டு தப்பிச் சென்றாராம். பலத்த காயமடைந்த ஆனந்தை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலுாா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு ஆனந்த் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.