திருவண்ணாமலை அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் கிராமம், களா்கொட்டாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை தச்சம்பட்டு போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் இதே பகுதியைச் சோ்ந்த மணிவேல் (33) என்பவரது வீட்டில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிவேலை கைது செய்தனா். 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.