ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக எஸ்.வி.நகரம் அரசு மருத்துவா் ஆா்.சுஷ்ருதா கலந்துகொண்டு கரோனா வைரஸ் மற்றும் தொழுநோய் போன்றவற்றிலிருந்து மாணவா்கள் தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், புகையிலைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.