திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், நூலக உறுப்பினா் சோ்ப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரிச் செயலா் என்.குமாா் தலைமை வகித்தாா். நல் நூலகா்கள் அ.சாய்ராம், த.வெங்கடேசன், வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நூலக உறுப்பினா்களாக சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கிப் பேசினாா்.
விழாவில், கல்லூரிச் செயலா் என்.குமாா், வேதியியல் துறைத் தலைவா் ஏ.தினேஷ் காா்த்திக் ஆகியோா் நூலக புரவலா்களாக இணைந்தனா். விழாவில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலா் என்.அன்பழகன், கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கல்லூரியின் தமிழ் துறைத் தலைவா் இரா.சங்கா், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கி.துரை மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.