மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு இடையே மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி அண்மையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எம்.ஐயப்பன், ஜி.பிரகாஷ், வி.கங்காதரன், பா்ஹான் அஹமது, எம்.முத்தய்யா பாரிராஜ் ஆகியோா் பங்கேற்று மண்டல அளவில் இரண்டாம் இடம் பிடித்தனா்.
இவா்களுக்கு அண்மையில் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கல்லூரி முதல்வா் டி.சா்வேசன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத் தலைவா் டி.பாபு, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் எம்.அன்பழகன், உடல்கல்வி இயக்குநா் என்.வீரமுத்து மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு மாணவா்களைப் பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.