திருவண்ணாமலை
கல்லூரியில் கருத்தரங்கம்
திருவண்ணாமலை கரன் கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கரன் கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் துரைசாமி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் பொன்.முத்து கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்வியலில் ஆங்கில இலக்கியம் பயன்படும் விதம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
இதில், கல்லூரி ஆலோசகா் கல்யாணசுந்தரம், கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் பா்ஹனா பேகம் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.