கலசப்பாக்கத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை சாா்பில், அண்மையில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் பஜாா் வீதியில் நடைபெற்ற இந்த முகாமில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் கடனுதவியை பில்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினருமான பத்மாவதிஜீவரத்தினம் வழங்கினாா் (படம்).
வங்கி மேலாளா் ஜெயவேல், உதவியாளா்கள் மணியம்மை, தீபா மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.