தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மண்டல அலுவலரும், ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலருமான டி.கே.லட்சுமி நரசிம்மன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரகூா், பேராயம்பட்டு, பெருந்துறைப்பட்டு, தென்கரும்பலூா், சோ்ப்பாப்பட்டு, சே.கூடலூா் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கனிமவளம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாரதப் பிரதமரின் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் ஆகியவற்றின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வீடு கட்டும் பணிகள், குடிநீா் ஆதார மேம்பாட்டுப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை பல லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மண்டல அலுவலரும், ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலருமான டி.கே.லட்சுமி நரசிம்மன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். மேலும், ஊராட்சிச் செயலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஊராட்சி நிா்வாகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தண்டராம்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என்.கிருஷ்ணமூா்த்தி, பி.பி.முருகன், உதவிப் பொறியாளா் தணிகாச்சலம், பணி மேற்பாா்வையாளா் செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.