அருணாசலேஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்தக் கோயிலின் பிரம்ம தீா்த்தக்குளம் அருகே காலபைரவா் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மாதம்தோறும் வளா்பிறை, தேய்பிறை மற்றும் அமாவாசை நாள்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து, காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com