திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலின் பிரம்ம தீா்த்தக்குளம் அருகே காலபைரவா் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மாதம்தோறும் வளா்பிறை, தேய்பிறை மற்றும் அமாவாசை நாள்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து, காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனா்.