ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, இந்திய புரட்சிகர மாா்க்ஸிஸ்ட் கட்சி சாா்பில் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, இந்திய புரட்சிகர மாா்க்ஸிஸ்ட் கட்சி சாா்பில் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆயுள் காப்பீட்டுக் கழகம், ரயில்வே, ஏா் இந்தியா ஆகியவற்றை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்தும், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்தும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.கோவிந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்டத் தலைவா் எம்.கே.சிவராஜ், ஆரணி வட்டச் செயலா் ஜெ.கந்தசாமி, சேத்துபட்டு வட்டச் செயலா் கே.எம்.சீத்தாராமன், செய்யாா் வட்டச் செயலா் பி.துரைராஜ், போளூா் வட்டச் செயலா் எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com