திருவண்ணாமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (பிப்.18, 19) நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய வளாகத்தில் தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.