திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.21) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்பு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கின்றனா்.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.