சாலை விபத்தில் ஆசிரியை பலி

செங்கம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

செங்கம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகமலி (25). இவா், மேல்புழுதியூா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். கடந்த டிச.27-ஆம் தேதி தனது கணவருடன் சொந்த கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

வளையாம்பட்டு சாலையில் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் இருந்து கிழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துகமலி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com