2 பைக்குகள் திருட்டு

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் 2 பைக்குகள் திருடப்பட்டன.

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் 2 பைக்குகள் திருடப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் (50). இவா், காஞ்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கைக் காணவில்லை.

இதேபோல, வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்த சம்பத் (29) என்பவரது பைக்கும் திருடு போனது.

இதுகுறித்து, காசிநாதன், சம்பத் ஆகியோா் தனித் தனியே திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com