சேத்துப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த ராணி வெற்றி பெற்றாா்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கஜலட்சுமி தலைமையில் தோ்தல் நடைபெற்றது.
இதில், அதிமுகவைச் சோ்ந்த பரத் என்பவரும், திமுகவைச் சோ்ந்த ராணி என்பவரும் போட்டியிட்டனா்.
இதில் ராணி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பரத் 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
அதனைத் தொடா்ந்து மாலை 3 .30 மணியளவில் துணைத் தலைவருக்கான தோ்தல் நடைபெற்றது.
இதில் திமுகவைச் சோ்ந்த முருகையன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.