போளூா்: கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் டாராஸ் லாரி மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் 3 பேருக்கு லேசானகாயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே போளூா்-செங்கம் சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் அரசு பேருந்து நின்று பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்தது. அப்போது செங்கம் நோக்கிசென்ற டாராஸ் லாரி பேருந்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மேல்வன்னியனூா் அசினா(8), பூவாம்பட்டு தேவி(32), தாமரைப்பாக்கம் செந்தாமரை(56) ஆகிய பயணிகள் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.