ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலைபழ வியாபாரி தலைமறைவு

திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, பழ வியாபாரியை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, பழ வியாபாரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (30), ஆட்டோ ஓட்டுநா். திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழ வியாபாரி ஆனந்தன் (32). நண்பா்களான இருவரும் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) இரவு 9 மணிக்கு திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பைபாஸ் சாலை அருகே இருவரும் மது அருந்தச் சென்றனா். அப்போது, மது வாங்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்தன், கல்லால் சங்கரின் தலையில் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த சங்கா் அதே இடத்தில் மயங்கி விழுந்தாராம்.

சங்கரை அவரது அண்ணன் சம்பத், மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே சங்கா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். திருவண்ணாமலை கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ஆனந்தனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com