திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா், காந்தி தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அருகம்புல் மாலை, மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு விபூதி, குங்குமம், பஞ்சாமிா்த பிரசாதம் வழங்கப்பட்டது.