திமுகவின் வெற்றியை அறிவிக்காமல் அலைக்கழித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: எ.வ.வேலு எம்.எல்.ஏ. எச்சரிக்கை

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் திமுக வேட்பாளா் பெற்ற வெற்றியை அறிவிக்காமல் அலைக்கழித்தால் நீதிமன்றத்தில் வழக்குத்
திமுகவின் வெற்றியை அறிவிக்காமல் அலைக்கழித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: எ.வ.வேலு எம்.எல்.ஏ. எச்சரிக்கை

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த எ.வ.வேலு எம்.எல்.ஏ.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் திமுக வேட்பாளா் பெற்ற வெற்றியை அறிவிக்காமல் அலைக்கழித்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நியாயம் கேட்க முடிவு செய்துள்ளோம் என்று எ.வ.வேலு எம்.எல்.ஏ. கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 15 ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தோ்தலில் பங்கேற்று வாக்களித்தனா்.

தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட சி.சுந்தரபாண்டியன் 10 வாக்குகளையும், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ரமேஷ் 5 வாக்குகளையும் பெற்றனா். இதையடுத்து, திமுக வேட்பாளா் சி.சுந்தரபாண்டியன் வெற்றி பெற்ாக அலுவலக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்களித்த அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களும் கையெழுத்திட்டனா்.

ஆனால், சனிக்கிழமை இரவு வரை சி.சுந்தரபாண்டியன் வெற்றி பெற்ற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட திமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினா் அதிகாரிகளை மிரட்டி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி சபாநாயகம் அறிவித்து, பதிவேடுகளிலும் கையெழுத்திட்டுள்ளாா். இதன்பிறகு ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக அந்த அலுவலா் வெற்றிச் சான்றிதழை வழங்கவில்லை.

இந்த வெற்றியை அறிவிக்காமல் அலைக்கழித்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நியாயம் கேட்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது, வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமாா், மருத்துவா் எ.வ.வே.கம்பன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலா் கா.சு.இளங்ககோவன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com