திருவண்ணாமலையில் நாளை பொங்கல் கோலப் போட்டி

திருவண்ணாமலை நகரில் 39 வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.14) இரவு அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் கோலப் போட்டி நடைபெறுகிறது.

திருவண்ணாமலை நகரில் 39 வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.14) இரவு அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் கோலப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து அச்சங்கத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை நகரின் 39 வாா்டுகளிலும் அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில், கோலப் போட்டிகள் நடைபெறவுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை (போகிப் பொங்கல் இரவில்) போடப்படும் கோலங்களை நடுவா்கள் தோ்வு செய்வா்.

ஒவ்வோா் வாா்டுக்கும் தனித்தனியே முதல் 3 பரிசுகளுடன் 5 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். முதல் பரிசாக தலா ரூ.6 ஆயிரத்திலான 24 இன்ச் எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, 2-ஆம் பரிசாக ரூ.3 ஆயிரத்திலான மிக்ஸி, 3-ஆம் பரிசாக ரூ.2 ஆயிரத்திலான எரிவாயு அடுப்பு, ஆறுதல் பரிசுகளாக ரூ.1,500 மதிப்பிலான ஜூஸ் மேக்கா் வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com