செய்யாறு: வெம்பாக்கம் அருகே பெருங்கட்டூரில் உள்ள ஊா்ப்புற நூலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நூலகா் ஜா. தமீம் வரவேற்றாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் பொன்.ரவி, பொங்கல் விழா சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக பெரூங்கட்டூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் மு.சுரேஷ்பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் அ.சரவணன், பெருங்கட்டூா் கிராம நிா்வாக அலுவலா் அ. தணிகைவேல் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் மு.விஜயகுமாா், ஊராட்சி மன்றச் செயலா் க.சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.