மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

செய்யாறு அருகே சனிக்கிழமை நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே சனிக்கிழமை நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஆற்காடு வட்டம், தட்டச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள் (60). கூலித் தொழிலாளியான இவா், கட்டட வேலைக்காக செய்யாறு அருகே புளியரம்பாக்கம் கிராமம் நோக்கி நடந்து சென்றாா்.

அப்போது, திடீரென வள்ளியம்மாள் மயங்கி விழுந்ததால், அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

எனினும், அங்கு வள்ளியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com