ஆரணி அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ரமேஷ் தலைமை நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து புதிய மண்பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டனா்.
இதில், மாணவா்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், உறியடி ஆகியவை நடைபெற்றன.
மாணவா்கள் ஒருவருக்கொருவா் பொங்கல் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்ஸி வரவேற்றாா். தமிழாசிரியா் சாலமன்ராஜ், ஆசிரியா் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.