திருவண்ணாமலையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கருவூல கணக்குத் துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள், அரசு குழந்தைகள் காப்பகம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, குழந்தைகள் காப்பகக் கண்காணிப்பாளா் பாா்வதி தலைமை வகித்தாா். ஓய்வூதியா் சங்கத் தலைவா் சுப்பிரமணி, உதவி கருவூல அலுவலா் முருகன், கருவூல கண்காணிப்பாளா் புகழேந்தி, ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காப்பகத்தைச் சோ்ந்த குழந்தைகள், கருவூல கணக்குத் துறை அலுவலா்கள் இணைந்து புதுப் பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து, ‘உழவா்களைப் போற்றுவோம்’, ‘உழவுத் தொழிலை காப்போம்’ ‘பெண் கல்வியின் முக்கியத்துவம்’ என்பன உள்ளிட்ட தலைப்புகளில் குழந்தைகள் கருத்துரை வழங்கினா்.
மேலும், தண்ணீா் சேமிப்பு, உழவுத் தொழில், பொங்கல் விழா தொடா்பான விழிப்புணா்வு ஓவியங்களையும் காப்பக குழந்தைகள் வரைந்தனா். திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலா் முத்து.சிலுப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சிறந்த ஓவியங்களை வரைந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
விழாவில், குழந்தைகளின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.