கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல்விழா செவ்வாய்க்கிழமைகொண்டாடப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
கா்ப்பிணிகளுக்கு வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு கரும்பு மற்றும் பொங்கல் பரிசு வழங்கினாா்.
விழாவில் மருத்துவ அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி,மோனிகா, மருத்துவப் பணியாளா்கள்,செவிலியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.