கீழ்பென்னாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அமாவாசை (75). கீழ்பென்னாத்தூா், ராஜாதோப்பு பகுதியில் உள்ள ஒருவரது விளைநிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் பணி செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை (ஜன.14) அதிகாலை வீட்டில் இருந்து விளைநிலத்துக்கு நடந்து சென்றாா்.
சிறுநாத்தூா் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம், அமாவாசை மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.