போளூா் ஸ்ரீதும்பை நாச்சியம்மன் கோயிலில் தைப் பொங்கலையொட்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
போளூரில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீதும்பை நாச்சியம்மன் கோயுல் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு பக்தா்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனா்.
பின்னா், அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பன்னீா் என பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டினா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் நிா்வாகிகள் சி.சுந்தரமூா்த்தி,சி.பன்னீா்செல்வம் மற்றும் இளைஞா்கள் கலந்துகொண்டனா்.