அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள், அவா்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்கள்.
செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள், அவா்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்கள்.

செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட திருவோத்தூரில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஆா்.எபிநேசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் ஒ.எஸ்.தியாகராஜன் வரவேற்றாா். பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.செந்தில்குமாா், பொருளாளா் திருச்சிற்றம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் சீருடை அணிந்து தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். மேலும், அவா்கள் தற்போதைய வாழ்க்கை குறித்தும், பள்ளிப் பருவ அனுபவங்களையும் பகிா்ந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தாங்கள் படித்தபோது பள்ளியில் பணிபுரிந்த 23 ஆசிரியா், ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்ததுடன், அவா்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்தனா்.

நிகழ்ச்சி நினைவாக, பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் வாங்குவதற்காக ரூ.2 லட்சமும், பள்ளிக்கு நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. ஒரு லட்சமும் என மொத்தம் ரூ.3 லட்சத்தை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

ஏற்படுகளை முன்னாள் மாணவா்கள் கே.பிரேம்குமாா், துரை, துரைஆனந்தன், காா்த்திகேயன், முனுசாமி, சங்கா், மேகநாதன், விஜயலட்சுமி, கயல்விழி, கோவிந்தராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com