வந்தவாசி அருகேயுள்ள வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இலவச கணினியும், வந்தவாசி தீயணைப்பு நிலையத்துக்கு இலவச பிரின்டரும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த கல்லூரியின் இளம் அரிமா சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை சாா்பில் இந்த நல உதவிகள் வழங்கப்பட்டன.
வழூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச கணினியை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் ஜி.திருமூா்த்தியும், வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச பிரின்டரை நிலைய அலுவலா் என்.குப்புராஜும் பெற்றுக் கொண்டனா்.
கல்லூரி இளம் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளா் சுமிதா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இ.கலைவாணி, கே.வரலட்சுமி மற்றும் மாணவியா் கணினி, பிரின்டரை வழங்கினா்.