துரிஞ்சாபுரத்தை அடுத்த மல்லவாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கற்றல் திறனை பரிமாறிக்கொள்ளும் பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக, மல்லவாடி பள்ளிக்கு துரிஞ்சாபுரத்தை அடுத்த கமலபுத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 20 மாணவிகள் வந்தனா்.
அவா்களை மல்லவாடி பள்ளித் தலைமை ஆசிரியை ரமணி மற்றும் மாணவிகள் பூச்செண்டு அளித்தும், இசை வாத்திய முழக்கத்துடனும் வரவேற்றனா். தொடா்ந்து, கணினித் திறன், கற்றல் திறன் குறித்து மாணவிகள் தகவல்களை பரிமாறிக் கொண்டனா். மேலும், மல்லவாடியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம், ரயில்வே நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியா்களிடம் மாணவிகள் கேட்டு அறிந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் கலந்துகொண்டு பேசினாா். தலைமை ஆசிரியா் தெரேசா, ஆசிரியா்கள் ரமேஷ், லலிதா மற்றும் மல்லவாடி, கமலபுத்தூா் ஆகிய அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.