8 ஊராட்சிச் செயலா்கள் பணியிடமாற்றம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிச் செயலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஆரணி: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிச் செயலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆணையின்படி, நிா்வாக வசதிக்காக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காடகமான் ஊராட்சிச் செயலா் பச்சையப்பன்-தி.கல்லேரிக்கும், தி.கல்லேரி ஊராட்சிச் செயலா் ஏழுமலை- காடகமானுக்கும், பண்டிதப்பட்டு ஊராட்சிச் செயலா் செல்வமணி -தேவனந்தலுக்கும், தேவனந்தல் ஊராட்சிச் செயலா் முருகன்- பண்டிதப்பட்டுக்கும், அழகானந்தல் ஊராட்சிச் செயலா் சதானந்தம்- நடுப்பட்டுக்கும், கொளக்குடி ஊராட்சிச் செயலா் சம்பத்- அழகானந்தலுக்கும், நடுப்பட்டு ஊராட்சிச் செயலா் செந்தில்- தேவனூருக்கும், தேவனூா் ஊராட்சிச் செயலா் காா்த்திகேயன்- கண்டியாங்குப்பத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஊராட்சிச் செயலா்கள் பணிமாறுதல் செய்யப்பட்ட பணியிடத்தில் உடனடியாக பணியில் சேரவும், பொறுப்புகளை ஒப்படைத்த விவரத்தை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஆா்.ஆனந்தன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com