வந்தவாசி: வந்தவாசியில் குப்பை கொட்டச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
வந்தவாசியில் அச்சிறுபாக்கம் சாலையைச் சோ்ந்த மீன் வியாபாரி ரங்கன் மனைவி சாந்தி (51). இவா் சனிக்கிழமை காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டிக்குச் சென்றாா்.
அப்போது தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் சாந்தி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதில் நிலை தடுமாறி விழுந்த சாந்திக்கு தோளில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.