விவசாயி கொலை வழக்கு: அண்ணன்-தம்பி, சகோதரிக்கு ஆயுள் சிறை

போளூா் அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி, சகோதரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை: போளூா் அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி, சகோதரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், தேவிகாபுரம் கிராமம், பழைய காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராமு (58), விவசாயி. இவரது வீட்டுக்கு எதிா் வீட்டில் வசித்தவா் விவசாயி ஜெயவேல் (60). இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 2012, மாா்ச் 4-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயவேல், அவரது குடும்பத்தினா் சோ்ந்து ராமுவை கட்டை, இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ராமு, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயவேல், அவரது மனைவி எல்லம்மாள் (52), மகள் பரிமளா (30), மகன்கள் முனியப்பன் (48), கந்தன் (எ) கண்ணதாசன் (35), முனியப்பன் மனைவி ஜெயந்தி (40) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், முனியப்பன், கந்தன் (எ) கண்ணதாசன், பரிமளா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

எல்லம்மாள், ஜெயந்தி ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். வழக்கு காலத்திலேயே ஜெயவேல் இறந்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com