வந்தவாசி: பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வந்தவாசியில் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் ஒன்றியத் தலைவா் தீபநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அவா்கள் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட துணைத் தலைவா் சுகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ஜா.வே.சிவராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சாத்தான்குளம் சம்பவம் தொடா்பான அனைவரையும் கைது செய்யக் கோரியும் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் வந்தவாசி தேரடியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் தலைவா் எ.ஆரிப் தலைமை வகித்தாா். ஆா்.விஜயன், ஆா்.அசேன், எம்.கன்னியப்பன், எ.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்..