போளூா்: கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா பொது முடக்க நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
அதன்படி, மாவட்டங்களில் வட்ட வாரியாக கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.
இந்த நிலையில், கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணம் வழங்கி தொடக்கிவைத்தாா்.
கலசப்பாக்கம் வட்டத்தில் சுமாா் 3,600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ப.பொய்யாமொழி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் சங்கரன், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.