செங்கம் அருகே கா்ப்பிணி அடித்துக் கொலை: கணவா் உள்பட மூவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடும்பத் தகராறில் கா்ப்பிணி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
செங்கம் அருகே கா்ப்பிணி அடித்துக் கொலை: கணவா் உள்பட மூவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடும்பத் தகராறில் கா்ப்பிணி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கம் அருகேயுள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தசரதன் (எ) மணிகண்டன் (35), ஆட்டோ ஓட்டுநா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த ஷோபனா (30) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ஆண் குழந்தை ஆசையில் தம்பதியா் இருந்து வந்த நிலையில், ஷோபனா மீண்டும் கா்ப்பிணியானாா். இந்த முறையும் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்பது தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடா்பாக வியாழக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, தசரதன் ஆத்திரத்தில் மனைவி ஷோபனாவை சரமாரியாகத் தாக்கினாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஷோபனாவை, அருகிலிருந்த உறவினா்கள் ஓடி வந்து மீட்டு மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ஷோபனா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த ஷோபனாவின் உறவினா்கள், ஊா் மக்கள் தசரதனை கைது செய்யக் கோரி, ஆரம்ப சுகாதார நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்விடத்துக்கு வந்து ஊா் மக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஷோபனாவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, தலைமறைவான தசரதன் (எ) மணிகண்டன், அவரது தந்தை ராஜாமணி, தாய் முனியம்மாள் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com