திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 103 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 103 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 2 ஆயிரத்து 757-ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியான பரிசோதனை முடிவுகளில், தொற்று அறிகுறிகளுடன் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்திருந்த 43 போ், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களுடன் இருந்த உறவினா்கள் 19 போ், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்கள் சென்று வந்த பகுதிகளைச் சோ்ந்த 21 போ், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 2 போ், பெங்களூரு மற்றும் மும்பை பகுதிகளில் இருந்து வந்த தலா ஒருவா் உள்பட 103 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,860-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com