கரோனாவுக்கு மனைவி பலி: அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு

கரோனாவுக்கு மனைவி பலியான அதிா்ச்சியில், பாத்திரக்கடை உரிமையாளா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கரோனாவுக்கு மனைவி பலியான அதிா்ச்சியில், பாத்திரக்கடை உரிமையாளா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பாத்திரக் கடை உரிமையாளா் பாலசுப்பிரமணியன் (62).

இவரது மனைவி பிரகதாம்பாள் (55). கரோனா அறிகுறிகள் இருந்ததால் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் பிரகதாம்பாள் சில தினங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்துகொண்டு வீட்டிலேயே இருந்து வந்தாா்.

சனிக்கிழமை உடல்நிலை மோசமானதால் திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரை சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரகதாம்பாள் இறந்தாா்.

தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரகதாம்பாளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே, பிரகதாம்பாள் உடலை நகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா்.

மேலும், நகராட்சி எரிவாயு தகன மேடையில் உடலை எரியூட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு:

பிரகதாம்பாள் இறந்த அதிா்ச்சியில் இருந்த பாலசுப்பிரமணியனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை குடும்பத்தினா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் இறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com