செங்கத்தை அடுத்த மேல்மண்மலையிலிருந்து நாட்டாா்கொட்டாய் வழியாக செ.நாச்சிப்பட்டு செல்லும் தாா்ச் சாலை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், விவசாயிகள் விவசாயப் பொருள்களை அந்த வழியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் எதிா்பாா்கிறாா்கள்.