வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் அம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாலை உற்சவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தாா். கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் உள்ளிட்டோா் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.