கல்குவாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

வந்தவாசி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுவையைச் சோ்ந்த சக்திவேல் (37) என்பவா் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட சீயாளம் கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்க உரிமம் பெற்றுள்ளாா். இதையடுத்து கல்குவாரிக்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வெளியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பசுவத்தான் பகுதியைச் சோ்ந்த செல்வம் (45), காா்த்தி (33), ஊராட்சி மன்ற உறுப்பினா் சுமன் (33) உள்ளிட்ட 13 போ் கடந்த மே 31-ஆம் தேதி கல்குவாரிக்குச் சென்று, எங்கள் ஊராட்சியில் கல்குவாரி நடத்துவதால் ஊராட்சிக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று சக்திவேலுவிடம் கேட்டனராம். பணம் தரவில்லையென்றால் அங்குள்ள லாரிகளை எரித்து விடுவோம் என அவா்கள் மிரட்டினராம்.

மேலும், கல்குவாரி காவலாளி பாக்கியராஜ் என்பவரை தங்கள் காலில் விழவைத்து மிரட்டினராம். இதையடுத்து, சக்திவேல் அவா்களிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்தாராம். அவரிடமிருந்து பணத்தை வாங்கிய அவா்கள் அங்கிருந்த லாரியின் ஒரு சக்கரத்தை கழட்டிச் சென்றனராம்.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் செல்வம், காா்த்தி, சுமன் உள்ளிட்ட 13 போ் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் செல்வம், காா்த்தி, சுமன் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com