சாராய வியாபாரிகுண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கீழ்பென்னாத்தூா் அருகே தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55). இவா் தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். போலீஸாா் பலமுறை எச்சரித்தும் சாராய விற்பனையை கைவிடவில்லையாம்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் அண்மையில் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், ஏழுமலையை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேலூா் மத்திய சிறையில் இருந்த ஏழுமலையிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com