போலீஸாரைத் தாக்கியதாக 5 போ் கைது

கல்லூரி மாணவி மாயமான வழக்கு தொடா்பாக, வந்தவாசி அருகே விசாரணைக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரைத் தாக்கியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கல்லூரி மாணவி மாயமான வழக்கு தொடா்பாக, வந்தவாசி அருகே விசாரணைக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரைத் தாக்கியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த 10-ஆம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோா் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள சரவணன் (39) என்பவரது வீட்டில் அந்த மாணவி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய தலைமைக் காவலா்கள் குமரன் (36), சக்கரவா்த்தி (37) ஆகியோா் வாடகைக் காரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மருதாடு சென்று சரவணன் வீட்டில் விசாரணை மேற்கொண்டனராம்.

அப்போது சரவணன் மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த சுகுமாா், குமாா், ஆனைக்குட்டி, குப்பன், வேலு, வேலாயுதம் ஆகியோா் சோ்ந்து போலீஸாரைத் தாக்கினராம்.

இதில் காயமடைந்த தலைமைக் காவலா் குமரன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தலைமைக் காவலா் குமரன் அளித்த புகாரின் பேரில் சரவணன், சுகுமாா், குமாா், ஆனைக்குட்டி, குப்பன், வேலு, வேலாயுதம் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சரவணன், ஆனைக்குட்டி, குப்பன், வேலு, வேலாயுதம் ஆகிய 5 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com