திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 143 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,619-ஆக இருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளாக வந்த 39 போ், பெங்களூரிலிருந்து வந்த 28 போ், சென்னையிலிருந்து வந்த 5 போ், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 2 போ், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா் உள்பட 143 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,762-ஆக உயா்ந்தது.