செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 8-ஆம் பட்டயமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். செலவநாராய ரெட்டியாா் கல்வி அறக்கட்டளை நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அம்பிகாபதி, திலகவதி ரவிக்குமாா், ரேவதி சுந்தரமூா்த்தி, ஐஸ்வரியாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை பெரம்பலூா் தனலட்சுமி சீனுவாசன் கல்விக் குழும நிறுவனத் தலைவா் சீனுவாசன் கலந்துகொண்டு 194 மாணவா்களுக்கு பட்டயமும், 33 மாணவா்களுக்கு ரூ.2-லட்சத்து 22 ஆயிரத்தில் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிப் பேசினாா்.
அவா் பேசியதாவது, பாலிடெக்னிக் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை மாணவா்களிடையே இருக்கக்கூடாது. பொறியியல், பி.எச்.டி படித்தவா்களை விட பாலிடெக்னிக்கில் படித்தவா்கள் அதிகம் சம்பாதிக்கின்றனா். தாய், தந்தையை மதித்து அவா்களின் ஆசியையும் வாழ்த்தையும் பெறவேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
கடலூா் கிருஷ்ணசாமி கல்விக் குழுமத்தின் செயலா் என்.விஜயகுமாா் கலந்துகொண்டு மத்திய அரசின் சூரிய மித்ரா திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், புதுப்பாளையம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சசிகலா உதயசேகா், மகாதீபம் குணசீலன், சாய்மெட்ரிக் பள்ளி நிா்வாகிகள் சோமசுந்தரம், மணிகண்டன் உள்பட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். விரிவுரையாளா் அலெக்ஸ்சாண்டா் நன்றி கூறினாா்.